ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
நாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்” என்று டாக்டர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா கூறினார்.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆக்ராவில் ஒவ்வொரு மாதமும் 5,000 நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இனி சிறுவர்களாக, பெரியவர்களாக இருந்தாலும் நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.