கொரோனாவிற்கே உலகம் ஆட்டம் கண்ட நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்றா என மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் நேஹா கூறுகையில், “கோவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்கள் தொடர்ச்சியான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுகாதார வல்லுநர்கள் இப்போது `டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர்.
இந்தப் புதிய வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளுவை (Spanish Flu) போலவே பேரழிவை உண்டாக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, டிசீஸ் எக்ஸ் என்பது நோய்க்கிருமியைக் குறிக்கிறது; இது தெரியாத பெரிய அளவிலான தீவிரமான தொற்றுநோயை ஏற்படுத்தும். மேலும் மனிதர்களிடையே பெரிய அளவிலான நோய்களுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.
எச்சரிக்கையாக இருங்கள்!