சருமநிறம் என்பது புறப்பூச்சுகளால் வருவதல்ல. உணவுதான் அதைத் தீர்மானிக்கும். வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது சரும நிறத்தை மேம்படுத்தும். ஏற்கெனவே நல்ல நிறத்துடன் இருந்து, வெயில் அல்லது பராமரிப்பின்மை காரணமாக பொலிவிழந்த சருமம் என்றால் புற அழகு சிகிச்சைகளின் மூலம் அந்த சருமத்தை சரிசெய்யலாம்.
இன்னும் சொல்லப்போனால் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும், பருக்கள் உள்ளவர்களுக்கும் குங்குமாதி தைலம் ஏற்றுக்கொள்ளாது. பருக்களை அதிகப்படுத்தும். எனவே மருத்துவரோ, அழகுக்கலை நிபுணரோ உங்கள் சருமப் பிரச்னைகளுக்காக பிரத்யேகமாகப் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தவும். அது எல்லோருக்குமானது அல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.