வீட்டிற்கு வந்ததும், மகளின் நிலையைப் பார்த்ததும் பதறியவர், 911 உதவி எண்ணை கிரிஸ்டனில் கேண்டலேரியோ அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போது, படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், `கேண்டலேரியோ தன்னுடைய குழந்தையை வீட்டில் தனியாக விட்டுப்போவது இது முதல்முறையல்ல. நாங்களும், சுற்றியுள்ளவர்களும், குழந்தையை இப்படி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர் எப்போதும் குழந்தையைத் தனியாகவே விட்டுச் செல்வார்’ என்றனர்.
கேண்டலேரியோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் 28 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது குழந்தையை 10 நாள்கள் வரை, வீட்டில் தனியாக விட்டுவிட்டு, விடுமுறையைக் கழிக்க தாய் சென்ற சம்பவம், சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.