பிபர்ஜாய்: 150 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் புயல், தயார் நிலையில் ராணுவம் – என்ன நடக்கிறது?

Share

புயல், கடல், பிபர்ஜாய், குஜராத்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலை கொந்தளிப்புடன் வைத்திருக்கும் பிபர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15ஆம் தேதி) மாலை குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கரையைக் கடக்கத் தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதைத்தவிர்த்து, பாகிஸ்தானின் கராச்சி நகரத்திலும் இப்புயலின் தாக்கம் காணப்படுகிறது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜாலோர் பகுதிகளில் புயலின் தாக்கம் தென்படுகிறது.

மாலை 6 மணிக்குமேல் கரையைக் கடக்கத் தொடங்கிய இப்புயல், நள்ளிரவு வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 140 முதல் 150 கிமீ வரையிலான வேகத்தில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com