பத்தமடை பட்டுப்பாயின் சிறப்புகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளர்க்கப்படும் ‘கோரை’ புல்லில் இருந்து பட்டுப் பாய் தயாரிக்கும் தொழில் பிரபலமாக இருந்துவருகிறது. சில்க் அல்லது பருத்தியைப் பயன்படுத்தி கைத்தறி மூலம் இந்தப் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பாய்கள் தயாரிக்கப்படும் கோரைப் புற்கள், தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் தமிழ்நாடு, கேரளாவிலுள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் மிகுதியாக வளர்கின்றன.
Quad Summit: அமெரிக்க அதிபர் பைடன் உடன் நரேந்திர மோடி சந்திப்பு… குவாட் அமைப்புக்கு பாராட்டு
பத்தமடை பாய்கள் மிகவும் மிருதுவாகவும், நன்கு மடியக் கூடியதாகவும் இருப்பது அதன் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமாகவும், மிகவும் நெருக்கமாகவும் நெய்யப்பட்ட பத்தமடை பாய்கள் பட்டுப் பாய்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் துணி போன்ற உணர்வைக் கொடுப்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. கிட்டதட்ட 45 நாட்கள் கோரைப் புற்கள் ஊறவைத்து பதப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் ஒரு பாயை உருவாக்க 2-3 வாரங்கள் தேவைப்படுகிறது. மிகச் சிறந்த பட்டுப் பாய்களை உருவாக்க கோரைப் புற்களைப் பதப்படுத்துவது மற்றும் நெய்வதற்கு நான்கு மாத காலங்கள் கூட தேவைப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.