உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு. www.tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
வங்கதேசம், மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 544 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. வங்க தேசம் தலைநகர் டாக்காவிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை..!
ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் சென்னை, திருச்சி, கோவை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
