காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

Share

யாசின் மாலிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

யாசின் மாலிக்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார்.

தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது. கடுமையான சட்டமாக கருதப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்டவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளை யாசின் மாலிக் மறுக்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று தேசியப் புலனாய்வு முகமை வாதிட்டது. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com