பாஜக எம்.பியுடன் மேடையில் அமர்ந்திருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள்

Share

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

”கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.”

2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு, தனது விரக்தியையும் பயத்தையும் வெளிப்படுத்தி தெரிவித்த வார்த்தைகள் இவை.

கடந்த வாரம், குஜராத்தின் பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் பாபோரின் முகநூல் பதிவில் உள்ள படங்களைப் பார்த்து பில்கிஸ் அதிர்ச்சியடைந்தார்.

தாஹோத் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவின் சிங்வாட் கிராமத்தில் 2023 மார்ச் 25 ஆம் தேதி மாநில நீர்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி ஜஸ்வந்த்சிங் பாபோர் இதில் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com