10 கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு, சில அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆண்டு செலவு, ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தையின் எடையை பொறுத்து மருந்து எடுத்துக்கொள்வதன் அளவு அதிகரிக்கும். இந்த வரி விலக்கு மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு கணிசமான செலவு மிச்சமாகும், மற்றும் நோயாளிக்கு தேவையான நிவாரணமும் கிடைக்கும்.

அதேபோல், பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் (pembrolizumab) மருந்துக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதுகெலும்பு தசைச் சிதைவு அல்லது டச்சேன் தசைநார் சிதைவுக்கான சிகிச்சைக்கான குறிப்பிட்ட மருந்துகளுக்கு ஏற்கெனவே விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு கோரி பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தததையடுத்து இந்த வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.