
நடப்பு ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். செல்லமாக 'டிகே' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபினிஷராக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட ரோல்தான் என இதனைச் சொல்லலாம். இதற்கு முன்னர் கடந்த 2018 வாக்கில் சில போட்டிகளின் முடிவை இந்திய அணிக்கு சாதகமாக தனது அபார பேட்டிங் திறன் மூலம் அற்புதமாக முடித்துக் கொடுத்தவர்.