
புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
2 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய, இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் குணமாகி வருகின்றன. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்கவேண்டும் என்றும், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.