ஒருவேளை எண்டோமெட்ரியாசிஸ் சிஸ்ட் காரணமாக இப்படி நிகழ்ந்து, அதன் விளைவாக வலி இருக்கலாம். அதனால்தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைத்திருப்பார். அந்த மாத்திரைகளுக்கு உங்கள் பிரச்னை சரியாகிறதா என்பதை வைத்து மேற்கொண்டு எப்படிப்பட்ட சிகிச்சைகளைக் கொடுப்பது என தீர்மானிப்பார்.
ஒருவேளை இந்த மாத்திரைகளில் உங்களுக்கு குணம் தெரியவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஊசி போடப்படும். நீங்கள் கர்ப்பம் தரிக்கிற திட்டத்தில் இல்லை என்கிற பட்சத்தில் கர்ப்பப்பைக்குள் ஒரு கருவியைப் பொருத்துவார்கள். அதையும் உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்வார்.
இப்படி எந்தச் சிகிச்சையுமே பலன் தராதபட்சத்தில், கட்டி பெரிதாகிக் கொண்டே போனால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை அகற்ற வேண்டியிருக்கும். அந்தக் கட்டியின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்துதான் எதையும் முடிவு செய்ய முடியும். அப்படி எந்தக் காரணமும் இல்லாமல் அறுவை சிகிச்சையின் விளைவாகவும் கர்ப்பப்பையும் சினைப்பையும் சும்மா ஒட்டிக்கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வலி, சிலநாள்களுக்கு இருக்கும். போகப்போக சரியாகி விடும்.
ஒருவேளை அறுவை சிகிச்சையின் மூலம் அதைச் சரி செய்தாலும் மீண்டும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே காரணம் அறிந்து சரியான சிகிச்சை கொடுக்கப்பட்டால்தான் இதற்கான நிரந்தர தீர்வைப் பெற முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.