ஆங்கிலேயர்களுக்கெதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கொல்கத்தாவிலுள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் நாளை உரையாற்றவிருக்கிறார்.
இந்த நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் (Anita Bose-Pfaff), தன்னுடைய தந்தை ஓர் இடதுசாரி என்றும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவரை பிரதிபலிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.