Monthly Archives: November, 2025

ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு – திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி! | ranipet – renovation of the memorial kamarajar stayed – udhayanidhi was proud to inaugurate

அவரின் வீடு சிறியதாகவும், காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்ததால் தன் நண்பரான ஏ.பி.சுலைமானை அணுகி அவ்விடத்தில் காமராஜரை தங்கவைத்து, இருவரும் நீண்ட ஆலோசனை செய்து போராட்ட நகல்களை தயாரித்துகொண்டு வேலூர் வழியாக ஆங்கிலேய காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துசென்றனர். பின்னர், தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து அப்போராட்டத்தை விளக்கி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறச் செய்தார்கள். காமராஜர் நினைவகம்இதையடுத்து, காமராஜரும், கல்யாணராமனும் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் பெற்றனர். “சுதந்திரப் போராட்ட…

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற…

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் அணியின் சக வீராங்கனைகளுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்தார். “ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்த வெற்றிக்கான பெருமை பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் சொந்தமானது” என்று அவர் கூறினார்.…

ரஞ்சி போட்டியில் விதர்பா அணி ரன்​ குவிப்பு | vidarbha scores runs versus tamil nadu in ranji trophy

கோயம்​புத்​தூர்: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது. இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர். இந்​திரஜித் 96 ரன்​களில் வீழ்ந்தார். ஷாருக்…

குடிநீரை எப்படிக் காய்ச்ச வேண்டும்? – How should drinking water be boiled?

“நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம்…

‘ஷெபாலி வர்மா ஒரு மேஜிக்; இது இந்தியாவுக்கான வெற்றி!’ – பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் உருக்கம்! |”Coach Amol Muzumdar Praises Shefali Verma: ‘She’s Pure Magic, This Win Belongs to India!’”

ஷெபாலியின் செயல்பாட்டை ஒரே வார்த்தையில் மேஜிக்கல் எனக் கூறுவேன். அரையிறுதியில்தான் அணிக்குள் வந்தார். ரன்கள் அடித்து விக்கெட்டும் எடுத்து கொடுத்தார், அசத்திவிட்டார்.Published:Today at 12 AMUpdated:Today at 12 AMAmol Mazumdar நன்றி

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்தது எப்படி? – அணுகுமுறை மாறியதால் வசமான உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மு.பிரதீப் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழ்2 நவம்பர் 2025, 19:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.…

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி – Women’s WC | team india beats south africa to won womens odi world cup championship title

மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது. அந்த அணிக்காக கேப்டன் லாரா…

அரசு அதிகாரி முதல் பள்ளி மாணவிகள் வரை: தொடரும் மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி? – காவல்துறை விளக்கம் | From government officials to schoolgirls: Scams continue: How to stay safe? – Police explanation

காவல் ஆணையர் விஜயகுமார் கூறியதாவது: “பல வகையான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது டிஜிட்டல் கைது (Digital Arrest).”அதிகாரியைப் போல நடித்து, போதைப்பொருளைக் கடத்தியதாக ஒருவரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுவார்கள். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு லட்சம், கோடி எனத் திருடுவார்கள்.இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே ஆளாகியுள்ளனர். இந்த மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் -இந்தியாவில் டிஜிட்டல் கைது…