தீபாவளி : பாரம்பரியம் மாறா செட்டிநாட்டுப் பலகாரங்கள் – இன்றும் எப்படி தனித்து நிற்கின்றன?
வாடிக்கையாளர்களை கவரத் துரித உணவுகளின் வெரைட்டி அதன் தேவைக்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு இன்று மவுசு அதிகம் உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் தனித்துவமாகக் கருதப்படுவதில் கட்டடக்கலைக்கும் உணவு வகைக்கும் தனி இடம் உண்டு. . பாரம்பரிய சுவை, பாரம்பரியத் தயாரிப்புகளால் தனித்து நிற்கும் செட்டிநாட்டு பலகாரங்கள் உலக அளவில் புகழ்பெற்றவையாக உள்ளன. இந்தச் செட்டிநாட்டு பலகாரங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…









