Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!
மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். சிவகுமார் என்ற மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். இப்படுகொலையால் நடிகர் சல்மான் கான் மிகவும் மனமுடைந்துவிட்டார். தன்னால்தான் பாபா சித்திக் கொலைசெய்யப்பட்டதாக சல்மான் கான் கருதுகிறார். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். நடிகர் சல்மான் கானுக்கு பாபா சித்திக் மிகவும் நெருக்கமானவர்…









