அண்ணாமலை மீது போலீஸில் புகாரளித்த பாஜக முன்னாள் நிர்வாகி! – என்ன காரணம்? | former bjp cadre lodged complaint against bjp state president annamalai in kovai
இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப்…









