ஒடிஷா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த சென்னை பயணியின் ‘திக் திக்’ நிமிடங்கள்
கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோரமான ரயில் விபத்தில் உயர் பிழைத்தவர்களில் ஒருவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி. தனது 12 வயது குழந்தையுடன், கோரமண்டல் ரயில் பெட்டியின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தபோது உயிருடன் இருப்பதை எண்ணி நிம்மதி அடைந்தாலும், அவர் கண்ட காட்சி அவரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது.”நான் நின்றிருந்த இடத்தில் சிதறிய நிலையில் கைகள், உடைந்த…







