`ஒலிம்பிக் பதக்கத்தை ஓஹையோ நதியில் வீசிய முகமது அலி' – வீராங்கனைகள் நினைவுபடுத்திய வரலாறு
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் அனைவரும் மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் வீராங்கனைகளின்…




