'எனக்கு மரியாதை கொடுக்கவில்லை' – அமைச்சரிடம் கொதித்த எம்.பி: ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு
ராமநாதபுரத்தின் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி 3 மணிக்குத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் 2.45 மணிக்கே வந்துவிட்டதால், அவரது உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியைத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன்…