40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா?.. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை..!
சென்னை: செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி அண்ணாமலை குறித்து விசாரிக்க வலியுறுத்துவேன் என்றும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர்…








