பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம்.
எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், மனஅழுத்தம், ஏதேனும் வருத்தம், மதுப்பழக்கம், புகையிலைப் பழக்கம், வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா என்று கவனம் கொடுக்க வேண்டும்.
எனவே, 7 வயத்துக்கு மேல் தொடர்ந்து தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் இருக்கிறவர்களை, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. அப்போதுதான் எந்த நேரத்தில் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.