Daily Archives: January 24, 2023

இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ‘புல்லட்’ சின்னம் கேட்கும் எடப்பாடி அணி: தேர்தல் களத்தில் பரபரப்பு

சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லாததால் ‘புல்லட்’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி…

நடிகை அதியா ஷெட்டியை கரம் பிடித்த கே.எல். ராகுல்… புகைப்படங்கள் வைரல்

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது நீண்டநாள் காதலியான அதியா ஷெட்டியை இன்று திருமணம் முடித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. நன்றி

பீட்ரூட்டில் செய்யக்கூடிய டேஸ்டியான குளிர்கால ஆரோக்கிய ரெசிபிக்கள் இதோ!

நீங்கள் சாலட்டை விட வேகமானதாக ஏதாவது செய்ய விரும்பினால், இந்த ஸ்மூத்தி உங்களுக்கு எளிதாக இருக்கும். நன்றி

ஈரோடு இடைத்தேர்தல்: “அண்ணாமலை களமிறங்கி ஜெயித்துக் காண்பிக்கட்டும்!"- மாணிக்கம் தாகூர் எம்.பி சவால்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி வழங்குவதில் தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மாவட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை பட்ஜெட்டில் எந்தவித பயன்தரத்தக்க அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனவே வருகின்ற நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் முன்னேறவிழையும் மாவட்டம் என்பதற்கான பெயரோடு மட்டுமல்லாமல் உண்மையான வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.மாணிக்கம் தாகூர் எம்.பிஈரோடு கிழக்கு தொகுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அணி வேட்பாளர் யார்? ஓபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில்…

ஹார்மோன்களை சீராக்கும் வழிமுறைகள்! | How to regulate hormones!

நன்றி குங்குமம் தோழி நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத்…

காயம் குறித்த அச்சுறுத்தல் இல்லாத வரை பிரதான வீரர்கள் ஐபிஎல் விளையாடலாம்: ராகுல் திராவிட் | key players can play ipl as long as there is no injury concern rahul dravid

இந்தூர்: காயம் குறித்த அச்சுறுத்தல் ஏதும் இல்லாத வரையில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் ஐபிஎல் சீசனில் விளையாடலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சுமார் 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலை பிசிசிஐ தயார்…

வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது – என்ன நடந்தது ?

படக்குறிப்பு, கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட்4 மணி நேரங்களுக்கு முன்னர்’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’.   தனது…

நாளை பாமக மாவட்ட செயலாளர் கூட்டம் நடக்கிறது

சென்னை: நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெறுகிறது என்று பாமக அறிவித்துள்ளது. இது குறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை ஜன. 25ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த  தைலாபுரத்தில் உள்ள  பாமக அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்,…