நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிராக மறைமுக எதிர்ப்பலை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ராகுல் அழைப்பு
புதுடெல்லி: ‘பாஜவுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பலை நிலவுகிறது. ஆனால் இது வெளியில் தெரியாமல் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா…








