கண்களில் அரிப்பு, கண்ணீர், கட்டி… காரணம் அறிவீர்களா? |கண்கள் பத்திரம் – 24
“கண்களில் கட்டி வந்தால் சூடு… அரிப்பு வந்தால் அலர்ஜி… கண்ணீர் வந்தால் ஸ்ட்ரெஸ்… இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தாங்களே காரணங்களைச் சொல்லிக்கொண்டு கண் தொடர்பான பிரச்னைகளைப் பலரும் அலட்சியம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. கட்டி, கண்ணீர், அரிப்பு என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களின் பின்னணி வேறாகவும் இருக்கலாம். அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. அது குறித்த தகவல்களைப் பகிர்கிறார்…









