கச்சநத்தம் கொலை வழக்கு: 27 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை – வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
தமிழகத்தையே அதிர வைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை என பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு- சித்தரிப்பு படம் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது முன் விரோதத்தில் கச்சநத்ததுக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஆறுமுகம், சண்முகநாதன்,…








