15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்: மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது
சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…








