தென்காசி: கஞ்சா சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கள்ளநோட்டுகள்! – இருவர் கைது | fake currency seized by police, two were arrested in tenkasi
தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கஞ்சா கடத்தல், விற்பனை ஆகியவற்றைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரின் சோதனையில் மணிச்செல்வன், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்,கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்ததால் போலீஸார் அவர்களின் பையை சோதனையிட்டிருக்கின்றனர். அதில் ரூ.1,20,000 மதிப்பிலான 4 கிலோ கஞ்சா இருந்திருக்கிறது. அத்துடன், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்திருக்கிறது.…









