‘உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன’ – சோயப் மாலிக்கை பிரிந்து வாழும் சானியா மிர்சா? | Is Sania Mirza separating from her Pakistani husband Shoaib Malik
ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்…









