பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..!!
மதுரை: குற்ற வழக்கு பின்னணி கொண்ட பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 3வது முறையாக கோயில் அறங்காவலராக தேர்வான சொக்கலிங்கம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சொக்கலிங்கம் அறங்காவலராக தேர்வானது செல்லாது என உத்தரவிட கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். Source link








