பாதிக்குப்பாதி இடங்கள்; அதிமுகவுக்கு பாஜக புதிய நிபந்தனை: அமித்ஷா வருகைக்குப் பிறகு தொகுதிகளில் வேலைகளை ஆரம்பித்த மூத்த தலைவர்கள்
சென்னை: பாதிக்குப்பாதி இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளதோடு, தொகுதிகளில் தாங்களாகவே வேலைகளையும் தொடங்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடங்கியது. முதலில் நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு மொத்தமாக சீட் கொடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், எடப்பாடி…









