தமிழறிஞர் ஒளவை நடராசன் காலமானார் – பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்
படக்குறிப்பு, ஒளவை நடராசன்2 மணி நேரங்களுக்கு முன்னர்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86. சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து…