சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல் கே.எஸ்.அழகிரி மீது கார்கேவிடம் புகார்: இளங்கோவன் உள்ளிட்ட 4 தலைவர்கள் சென்னை திரும்பினர்
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, மோதல், மண்டை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் தலைவர்கள் டெல்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும் என்று மேலிடம் அறிவித்திருந்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில்…
