திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிகம் மாணவர்கள் படிக்கின்றனர்: அசத்தும் கிராமப்புற அரசு மேல்நிலைப்பள்ளி
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இயங்கிவரும் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி 1981ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு 2010ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட அளவில் மிகச்சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது 600 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இது படிப்படியாக உயர்ந்து 2021-22ம் கல்வியாண்டில் 1050க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை சேர்த்து மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாணவர்…









