Daily Archives: October 14, 2022

முதன்முறையாக ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை! |one year old baby was the first recipient of successful intestine transplant

இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், முதல்முறையாக 1 வயதுக் குழந்தைக்கு, குடல் மாற்று அறுவைசிகிச்சை (Intestine transplant) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.நாம் உண்ணும் பெரும்பான்மையான உணவுகளின் ஊட்டச்சத்துகளைச் செரித்து, சிறுகுடலே உடலுக்கு வழங்கும். சிறுகுடல் சரியாக இயங்காத பட்சத்தில், உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளை நம்முடைய உடலால் பெறமுடியாது. மாதிரிப்படம் pixabay ஸ்பெயினில் உள்ள எம்மா (Emma) என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு, சிறுகுடல் (short intestines)…

ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளைாயடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்…

ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் பார்த்த தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார்.லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக…

ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கு ஒன்றிய அரசில் புது பதவி: எடப்பாடி அணி அப்செட்

சாயல்குடி: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி தர்மர், ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எடப்பாடி அணியினர் அப்செட் ஆகியுள்ளனர். கடந்த மே மாதம் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் போட்டியிட்டனர். இவர்களில் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற பிரச்னையால்…

Doctor Vikatan: வீட்டிலேயே பிபி அளவை டெஸ்ட் செய்வது சரியானதா? | Doctor vikatan – Is home BP test right

ரத்த அழுத்தம் என்பது பல விஷயங்களால் மாறக்கூடியது. உதாரணத்துக்கு சிரித்தால் அதிகமாகும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நார்மலாகும். கோபப்பட்டால் அதிகமாகும். எனவே, இது புரியாமல் 120/80 இல்லையே என்று புலம்புவார்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி நம் உணர்வுகள், உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ரத்த அழுத்தத்துடன் தொடர்புண்டு. மாறாக ஒருவருக்கு தொடர்ந்து பிபி அளவு 140/90 என அதிகமாகவே இருந்தால் அதை அசாதாரணம் என்று…

WIPL 2023: 5 அணிகள், 22 போட்டிகள்; பெண்கள் ஐ.பி.எல்-க்குத் தயாராகும் பிசிசிஐ – முழு விவரங்கள் இதோ! | BCCI plans for women’s IPL next year with 5 major teams

இந்தியாவில் நீண்ட காலமாகவே முழுமையான பெண்கள் ஐ.பி.எல் தொடரை தொடங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இன்றும் யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாத பெண்கள் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!இந்தப் பெண்கள் ஐ.பி.எல் தொடரில் ஐந்து அணிகளுடன் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். ஒரு அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அதில் 6 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளாக இருக்கலாம். போட்டியில் ஆடும் 11 பேரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் வரை இடம்பெறலாம். அந்த…

ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு… பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

Brown Sugar : பொதுவாக சர்க்கரை உடல் பருமன் , நாள்பட்ட இதய நோய் மற்றும் டைப் 2 டயபடிக்கை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே அதை அளவாக உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது. நன்றி

நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை

தருமபுரி: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உடலை மீட்டுத்தரகோரி தருமபுரி எர்ரப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 3 நாட்களாக என் அம்மாவின் உடல் கோட்டையம் மருத்துவக்கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தாமதப்படுத்தாமல் தாயின் உடலை தருமபுரிக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.  Source link

சொல்லிட்டாங்க…

* ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வரும் முறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். பிரதமர் மோடி* காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கார்கேவை தலைவர்கள் வரவேற்கிறார்கள். என்னை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்* தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* பிரதமர் நேரு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தி பிரச்னைக்கு வழி வகுத்தார். ஆனால், மோடி அதற்கு…

பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை; கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்!

இன்றைய பரபரப்பான உலகில், நம் எல்லோருக்கும் `தலைக்கு மேல்’ எக்கச்ச வேலைகள். இதில் கேசப் பராமரிப்பில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்னைகளை இளம் வயதினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.இவற்றுக்கு தீர்வு என்ன? கேசப் பிரச்னைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும் தீர்வும் அளிக்கிறார் தலத் சலிம். இவர், கடந்த 20 ஆண்டுகளாகக் கேசம் மற்றும் சருமப் பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னையில் ஆலோசனை மற்றும்…