Monthly Archives: September, 2022

கள்ளக்குறிச்சி சம்பவம்: யூடியூப் சேனல்கள் நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற கோருவது ஏன்?

நபில் அஹமதுபிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது.…

திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை; திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்; ‘திருவல்லிக்கேணி பகுதியில் கழகம் வளர்த்த உண்மைத் தொண்டர், முன்னாள் பகுதிச் செயலாளரும், தற்போதைய பகுதிக் கழகத்தின் அவைத்தலைவருமான திரு. க.வே. செழியன் அவர்கள் மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஈடுசெய்யவியலா இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திருவல்லிக்கேணி பகுதி கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

“ 23 மணி நேரம் படுத்தே இருப்பேன்.. எனக்கு புவியீர்ப்பு விசை அலர்ஜி”: விநோத நோய், அவதியுறும் பெண்!|woman who had allergy of gravity

சில பேருக்குச் சிலவற்றின் மீது அலர்ஜி இருக்கும். உதாரணத்துக்கு, சிலருக்குப் பூனை அலர்ஜியாக இருக்கும், சிலருக்குத் தூசி அலர்ஜியாக இருக்கும், ஒரு சிலருக்கு சில மாத்திரைகள் அலர்ஜியாக இருக்கும். இப்படிப் பல அலர்ஜிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதிலிருந்து தப்பிக்க அந்தச் சூழலில் சிக்கிக்கொள்ளாமல் முன்கூட்டியே தடுத்துவிட்டால் போதும்.ஆனால், புவியீர்ப்பு விசையின் மீது ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் என்ன செய்வது… சிந்தித்துப் பார்க்கவே சற்று சிரமமாக உள்ளதல்லவா..?அலர்ஜி – சித்திரிப்பு படம் pixabayஅமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது லிண்ட்சி…

மெஸ்ஸி அசிஸ்ட்: கோல் பதிவு செய்த எம்பாப்பே, நெய்மர் | எழுந்து நின்று பாராட்டிய ரசிகர்கள் | Opposition team Fans standing ovation Messi for assist Neymar Mbappe score goals

லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக PSG சார்பில் எம்பாப்பே மற்றும் நெய்மர் கோல் ஸ்கோர் செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார் லியோனல் மெஸ்ஸி. அவரது செயலுக்காக எதிரணியின் ஆதரவாளர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். கால்பந்தாட்ட களத்தில் மாயமானை போல ஓடி, கோல் பதிவு செய்வார் மெஸ்ஸி. இதுதான் அவரது வழக்கமும் கூட. ஆனால் நடப்பு லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக…

Zee Tamil Tv Ninaithale inikkum serial update today on August 30th | சித்தார்த்தால் கைதான பத்மநாபன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். பத்மநாபன் ஏற்கனவே கோபமாக இருக்க இந்த நேரத்தில் கடை திறந்துள்ள பொம்மியை பற்றி ரகுவரன் ஏற்றி விட நான் நினைச்சா அந்த கடையே இருக்காது என வார்த்தையை விடுகிறார்‌.இந்த விஷயத்தை ரகுவரன் நளினி மற்றும் தமன்னாவிடம் சொல்ல இருவரும் ஆள் வைத்து கணபதி ஸ்வீட்ஸ் கடையை அடித்து நொறுக்க அந்த பழி பத்மநாபன் மீது விழ சித்தார்த் போலிஷில் புகாரளிக்க அவர் கைது செய்யப்படுகிறார். இதனால்…

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம் ~ அதன் தேவைகள் என்ன? | Cervical Cancer Vaccine Production Begins In India ~ What Are Its Needs?

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பபை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளனவா என்றும் இப்புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்றும் அரசு பெண்கள்நல சிறப்பு மருத்துவர் இர்ஃபானாவிடம் கேட்டோம்…”கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கு இந்தியாவில் Cervarix, Gardanil ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில்தான் செலுத்தப்பட்டு வருகின்றன. கர்ப்பப்பைஇப்புற்றுநோயைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை அரசு…

IND vs HKG: ராகுலிடம் இல்லாத இன்டென்ட்டை வெளிப்படுத்திய ஹாங்காங்; இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன? | KL Rahul lacks intent, while Suryakumar once again shines for India against Hongkong

அடுத்ததாக, ராகுலுக்கு பார்ட்னரான கோலியும் ஃபார்மை மீட்டெடுப்பதில் கவனமாக இருப்பதால் தொடக்கத்தில் ரன்ரேட் மொத்தமாகப் படுத்தேவிட்டது. ஸ்பின்னர்களுக்கு எதிராக தங்களது விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அவர்கள் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக, ஏசான் கான் மற்றும் முர்டஜாவின் சுழல் இக்கூட்டணிக்கு நெருக்கடி தந்தது. ஏசானின் பௌலிங் சக்லைன் முஸ்டாக்கை நினைவுபடுத்துவதைப் போல இருந்தது, முர்டஜா, வேகத்தைக் குறைத்து ரன் சேர்ப்பதை இன்னமும் கடினமாக்கினார். 10 ஓவர்கள் முடிவில்கூட 70 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. போட்டியின் 33% பந்துகளைச்…

ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? – ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்!

உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமே ஓட்ஸ் சாப்பிடலாம் என்பது தவறான கண்ணோட்டம். ஓட்ஸ் எப்படி சப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். நன்றி

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஆனந்த் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. Source link

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்த நிலையில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார். Source link