நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: காய்ச்சலால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 நாளில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சுகாதாரத் துறை ஆறுதல் கூறுவது போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள்…








