கட்சியின் தலைமை பொறுப்பில் எடப்பாடி இருந்தால் அதிமுகவை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்தால் பரபரப்பு; ஓபிஎஸ் அணிக்கு திடீர் ஆதரவு
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறும்போது, கட்சி தலைமை பதவியில் எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா…








