அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்கள் நியமிப்பதை கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது. விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக…









