மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு
திருவில்லிபுத்தூர்: இந்தியாவில் மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: இந்தியாவில் பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தலாக பார்க்கக் கூடாது.…









