Monthly Archives: July, 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. வேறு…

Chess Olympiad: தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கிடைத்தது எப்படி? ஒரு விரிவான பார்வை

கிரிக்கெட்டிற்கு எப்படி உலகக்கோப்பையோ, அதுபோல் செஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர் ஒலிம்பியாட். 1924-ம் ஆண்டு லண்டனில் முதல்முறை நடத்தப்பட்ட இத்தொடர் பின்பு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். தற்போது இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது.மாஸ்கோவில் நடக்கவிருந்த இவ்வருடத்திற்கான செஸ் ஒலிம்பியாட், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவில் நடத்த இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டது உலக செஸ் கூட்டமைப்பு (FIDE). சுமார் 2000 பேர் வரை பங்குபெறும் இத்தொடர்…

is chai served in kulhad healthier

இந்திய குடும்பங்களில் நீண்ட ஆண்டுகளாக முக்கிய பானமாக இருந்து வருகிறது டீ. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை தவிர, நண்பர்களுடன் வெளியே சென்று பேசி மகிழும் போது அருந்தும் பானமாகவும் இருக்கிறது டீ.இந்தியாவில் டீ அருந்தும் பலரை டீ பிரியர்கள் என்று சொல்வதை விட டீ வெறியர்கள் என்று சொல்லலாம். இந்தியர்களாகிய நமக்கு டீ முக்கியமானது மட்டுமல்ல அவசியமானதாகவும் இருக்கிறது. பொதுவாக டீ கடைகளிலும் தற்போது பிளாஸ்டிக் கிளாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் கப்பில் டீ…

மலிவு விலையில் நாற்றுகளை எங்கு வாங்கலாம்? வழிகாட்டும் வேளாண்மைத் துறை

விவசாயிகளுக்கு மலிவு விலையில் பலன் தரும் செடிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பல வித நாற்றுகளை உற்பத்தி செய்து, நர்சரிகள் மூலம் வழங்குகிறது. ஊடுபயிர்கள், பலன் தரும் செடிகளை தேர்வு செய்யவும், நர்சரிகளில் மலிவு விலையில் பெறவும் வழிமுறைகளை கூறுகிறார் வேளாண்மை இணை இயக்குநர் பா.இளங்கோவன்,”தோட்டக்கலைப் பயிர்களில் தென்னந்தோப்பில் ஊடுபயிராக நடுவதற்கு ஏற்ற பாக்கு, மிளகு செடிகள், வேலிப்பகுதியில் நடுவதற்கு ஏற்ற சில்வர் ஓக், தேக்கு, பலா, புளி போன்ற மரக்கன்றுகள் தரப்படுகின்றன.சுரைக்காய்…

தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். தேமுதிக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் தொடங்கி, ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு என அனைத்து கழக அமைப்புகளுக்கும் 4 கட்டங்களாக தமிழகம் முழுவதும் தேமுதிக  அமைப்பு தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் வரும் 10ம்தேதி தொடங்கி 24ம்தேதி என…

‘ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரப்போவதில்லை’ – இர்பான் பதான் சாடல் | No one returns to form while resting says former india cricketer Irfan Pathan

மும்பை: ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் 22 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற…

இளையராஜா எம்.பி ஆகிறார் – சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது. இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இவர்களுக்கான நியமன உத்தரவு…

இரட்டை இலைச் சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு: நாளை விசாரணை..!

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனராகவும்…

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள் ஈஸிதான்!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். அதிலும் உடல் பருமனால் ஏற்படும் தொப்பை, தோற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொப்பை போடுவதைப் பார்த்த பிறகுதான் உடல் பருமனாகிவிட்டது என்றே உணர்வே ஏற்படும். அதற்குப் பிறகு அதை மறக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுவோம்.Obesityதொப்பை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.”ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக…

உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி

கோவிட்-19 நெகெட்டிவ் ரிசல்ட் வந்ததால் தனிமையிலிருந்து வெளியே வந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதனையடுத்து சவுத்தாம்ப்டனில் ஜூலை 7ம் தேதி தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக ஆடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி

1 48 49 50 51 52 62