World Athletics Championships: 19 ஆண்டுகாலக் காத்திருப்பு; பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின் அவர் பங்குபெறும் மற்ற தொடர்களையும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். போட்டியைத் தொலைக்காட்சியில் காண முடியாத சூழலில் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் அவர் குறித்தான செய்திகள் கவனம் பெறுகின்றன. ஒலிம்பிக் பதக்கம் அவர் மட்டுமின்றி தடகளத்தின் மீதான கவனத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.Neeraj Chopraஇந்நிலையில் நாளை உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெறுகின்றனர். மேலும் 18 வது முறை…







