வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் தருமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு பார்வை

Share

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது

  • எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
  • பதவி, பிபிசி பங்களா

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, வன்முறைப் போராட்டம் எதிரொலியாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார்.

அதன் பிறகு அவர் பொது வெளிக்கு வரவில்லை.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவரது தொலைபேசி உரையாடல்கள் என்று கூறப்பட்ட சில ஆடியோக்கள் வெளிவந்த போதிலும், அது ஹசீனாவின் குரலா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கையான ஷேக் ரிஹானா இருவரும் இந்திய தலைநகரம் டெல்லி வந்தடைந்த பிறகு எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர்களோ அல்லது அமைச்சர்களோ எந்த தகவலும் வெளியிடவில்லை. இதுபற்றி எந்த செய்தியாளர் சந்திப்பிலும், பேட்டியிலும் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com