பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கால்பந்துத் தொடர் ஒன்று கடந்த வாரம் நேரு மைதானத்தில் நடந்தது. இந்திய பெண்கள் அணியும் நேபாள பெண்கள் அணியும் மோதிய இந்த நட்பு ரீதியிலான தொடரின் இரண்டு போட்டிகளுமே சமனில் முடிந்திருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நேபாளுக்கு எதிராக ஆடிய இந்திய அணியில் மொத்தம் நான்கு தமிழ் வீராங்கனைகளும் ஆடியிருந்தனர். இந்திய அணியின் கேப்டனே இந்துமதி என்கிற தமிழ்ப் பெண்தான். முதல் போட்டியில் இந்துமதியே ஒரு கோலையும் அடித்திருந்தார். இரண்டு போட்டிகளுமே சுவாரஸ்யமாக நடந்து முடிந்திருந்தது. இந்தத் தொடரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்திருந்தது. இந்திய அணியில் ஆடிய இன்னொரு தமிழ்ப் பெண்ணான சந்தியா தனது தாயை இரண்டாவது போட்டியை பார்வையிட அழைத்து வந்திருந்தார்.
சந்தியாவின் இந்த பதிவும் அம்மாவுடனான அவரின் புகைப்படமும் பலரையும் நெகிழ வைத்தது. இந்த புகைப்படத்தை பற்றி சந்தியாவிடமும் அவருடைய அம்மாவிடமும் பேசினேன். அவர்கள் பகிர்ந்தவை..