'டாப்-4 இடத்திற்கான பட்டியலில் இருப்பதற்கு எங்களுக்கு தகுதியில்லை'- ரியான் பராக் கூறியது என்ன?

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.17) ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது.

dc vs rr match
dc vs rr match

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரியான் பராக், “மிகவும் மோசமான செயல்பாடு. கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், (இன்று) விளையாடியதை விடச் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்.

இலக்கு என்பது கண்டிப்பாக 220-230 ரன்கள் வரை இருந்திருக்க வேண்டும். நாங்கள் சிறந்த அணிதான். நாங்கள் ஆடிய ஆட்டம் மற்றும் சரியானத் திட்டமிடுதல் இல்லாததே தோல்விக்கு காரணம்.

RR கேப்டன் ரியான் பராக்
RR கேப்டன் ரியான் பராக்

ஆனால், இதேபோல் தொடர்ந்து விளையாடினால் நாங்கள் டாப்-4 இடத்திற்கானத் தகுதி பட்டியலில் இருப்பதற்கு கூட தகுதியில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம்” என்று ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com