பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, “ எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைவிட கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிக மோசமானவை. இவை இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன’’ என்று தற்போது தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அசீம் மல்ஹோத்ரா, இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
“எம்.ஆர்.என்.ஏ மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை ஆய்வு செய்யப்பட்டது. அந்த முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியைவிட, கோவிஷீல்டு தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.