இதில் கலக்கப்படும் சத்துகள், முருங்கை கீரை, சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவித்துள்ளனர். ஆகையால் கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம், மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
ஊரட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு, சமூக ஆர்வலர் இயற்கை விவசாயி நலம் சுதாகர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.