அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரான் கை ஓங்குமா? புதிய தாக்குதல்களால் மாறும் நிலவரம்

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை வானத்தில் காணப்படுகிறது

    • எழுதியவர், டாம் பேட்மேன்
    • பதவி, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்ட போதிலும், வார இறுதியில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய பழிக்குப்பழி தாக்குதல்கள், மத்திய கிழக்கை இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மற்றொரு நேரடி மோதலுக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இஸ்ரேல் இரானில் உள்ள இடங்கள் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளது. லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைகளை வீசியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது போரைத் தொடங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், இந்த பிராந்தியம் எவ்வளவு ஆபத்தான முறையில் ஸ்திரத்தன்மையற்று உள்ளது என்பதை இது காட்டுகிறது. இது, போரின் தற்போதைய போக்கைப் பற்றிய மூன்று புள்ளிகளையும் எடுத்துக்காட்டுகிறது:

டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்குத் தனது இஸ்ரேலிய கூட்டாளியைக் கட்டுப்படுத்த முடியாது அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை, இந்த விஷயம் டெஹ்ரானுக்கு நன்றாகவே தெரியும், இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா போருடன், அமெரிக்கா-இரான் போரின் விதியை இணைப்பதற்காக, தனது சொந்த நாட்டின் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ள டெஹ்ரான் தயாராக உள்ளது

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com