அந்தளவுக்கு கோலிக்கு அதிகாரம் இருந்தது. அவர் விரும்பிய நபர்களை அவரால் அணிக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு அவரிடம் சுதந்திரம் இருந்தது. அப்படியிருந்த கோலியை வேண்டாமென முடிவு செய்த போது வம்படியாக ஓரங்கட்டியது பிசிசிஐ.
இப்போது ரோஹித்தின் கதையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், பிசிசிஐ அவருக்கு எதிராக நிற்கிறது. அதனால்தான் அவரே ஓய்வை அறிவித்துவிட்டு விலகினார்.

‘விரும்பாத கோலி!’
கோலி இதற்குதான் தயக்கப்படுகிறார். கோலி இரண்டையும் பார்த்துவிட்டார். பிசிசிஐ அவரை கொண்டாடியும் தீர்த்திருக்கிறது. அவமதிக்கவும் செய்திருக்கிறது. 2020-21 இல் நடந்தது போன்ற அவமதிப்பை கோலி மீண்டும் எதிர்கொள்ள விரும்பவில்லை. அதாவது தன்னுடைய ஓய்வு முடிவு தன்னுடைய கையிலேயே இருக்க வேண்டும் என கோலி விரும்புகிறார். மீண்டும் பிசிசிஐயால் பந்தாடப்படுவதை அவர் விரும்பவில்லை.